உன்னை நேசி
நம்மை நாம் நேசிப்பது மிகவும் அவசியமான ஒன்று. நம்மை தொலைத்து வெளியே தேடுவதன் விளைவு தான் விரக்தி, வெறுப்பு போன்றவைகளுக்கு காரணமாக அமைகிறது. நமக்குள் இருக்கும் நண்பன் ஒரு போதும் நம்மை ஏமாற்றம் செய்யமாட்டான். அவனுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியும். அவனைப் புரிந்து கொள்ள தொடங்கினாலே, எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி பேச தொடங்குங்கள். நிச்சயம் ஒரு வழி கிடைக்கும். முதலில் சிரமமாக இருந்தாலும் முடிவு நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும். அவன் நிச்சயம் ஒரு நல்ல தோழனாக இருப்பான். மற்றவர்களைப் போல் பாதியில் விட்டு செல்லமாட்டான். உங்களது நட்பு பிறப்பு முதல் இறப்பு வரை தொடரக்கூடிய ஒன்று. இப்படி ஒரு அற்புதமான உறவை கடவுள் நம்முடனே படைத்துள்ளார் நமது பாதுகாப்பிற்காக, ஆனால் நாம் இதை எப்பொழுதும் உணர்வதே இல்லை. இவனுடன் உரையாடல் தொடர கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் தவறில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்மை ஒரு ராஜாவாகவும் ஒரு ராணியாகவும் வைத்திருக்க இவனால் முடியும்.